டபுள் ஜாக்பாட் தரும் தபால் அலுவலகத்தின் சிறந்த திட்டம் - முழு விவரம்!

Post Office MIS Scheme: தேசிய மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சேமிப்பது மட்டுமின்றி இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற முடியும் என்பதுதான்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 4, 2023, 06:29 AM IST
  • இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும்.
  • அதன் பிறகும், நீங்கள் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.
  • அரசும் இத்திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
டபுள் ஜாக்பாட் தரும் தபால் அலுவலகத்தின் சிறந்த திட்டம் - முழு விவரம்! title=

Post Office MIS Scheme: தபால் அலுவலக முதலீடு செய்வதற்கும் சேமிப்பதற்கும் மிகச் சிறந்தவை என்பது தற்போது பரவலாக அறியப்படுகிறது. தபால் அலுவலக திட்டங்கள் மிகச் சிறந்த வட்டி விகிதங்களில் சிறந்த வருமானத்தை வழங்குகின்றன.

தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டங்களில் ஒன்று தேசிய மாதாந்திர சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற முடியும் என்பதுதான். சேமிப்பைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தரும். இந்த திட்டம், தொடர்பான அனைத்து தகவல்களையும் இங்கே நீங்கள் அறிந்துகொள்ளலாம். 

MIS திட்டம்

தபால் அலுவலக தேசிய மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் (MIS) 1000 ரூபாயில் கூட உங்கள் கணக்கைத் திறக்கலாம். தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தின் கீழ், ஒரே கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் நீங்கள் டெபாசிட் செய்யலாம். ஒரு வருடத்திற்குள் இந்தக் கணக்கையும் மூடலாம்.

மேலும் படிக்க | ரயில்வே மூலம் மாதாமாதம் ரூ. 80 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் - அது எப்படி?

இருப்பினும், அப்படி ஒரு வருடத்தில் கணக்கை மூடினால், டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் 2 சதவீதம் கழிக்கப்படும். இந்த தபால் அலுவலக திட்டத்தில் எந்த இந்தியரும் தங்களின் கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் வட்டி கோரப்படாவிட்டால், அதன் மீது எந்த வருமானமும் கிடைக்காது. எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்தும் ஆட்டோ கிரெடிட் மூலம் திரும்பப் பெறலாம்.

வட்டி விகிதம் எவ்வளவு?

தபால் அலுவலகத்தின் தேசிய மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் (MIS) கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு மாதம் முடிந்தவுடன் உங்களுக்கு வட்டி வழங்கப்படும். இந்த தபால் அலுவலக திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வருமான பெறலாம்.

திட்டத்தின் கீழ் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஆனால் முதிர்வு காலத்திற்குப் பிறகு, அது 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டிக்கலாம். இத்திட்டத்தின் மீதான வட்டி விகிதத்தையும் அரசு அதிகரித்துள்ளது. தற்போது இந்த திட்டத்தில் டெபாசிட்தாரர்களுக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி விகித பலன் அளிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலைய திட்டங்களில் மட்டுமின்றி, தபால் நிலைய உரிமையை வாங்கியும் பல பேர் வருமானம் ஈட்டுகின்றனர். அதன் உரிமையை எடுப்பதில் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது கூடுதல் சிறப்பாகும். அதாவது, நீங்கள் ரூ. 5 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அதில் இருந்து நீங்கள் அதிக பணத்தை வருமானமாக ஈட்டலாம். எல்லா இடங்களிலும் தபால் நிலையத்தை அணுக முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, தனிநபர்களுக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ உரிமை வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Indian Railways: ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலேயே பயணத் தேதியை மாற்றலாம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News