நினைத்தேன் வந்தாய்: சுடரை துரத்தி விட்ட மனோகரி.. அடம் பிடிக்கும் அஞ்சலி, அடுத்து என்ன?

Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 25, 2024, 02:23 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்.
  • சுடரை துரத்தி விட்ட மனோகரி.
  • அடம் பிடிக்கும் அஞ்சலி, அடுத்து என்ன?
நினைத்தேன் வந்தாய்: சுடரை துரத்தி விட்ட மனோகரி.. அடம் பிடிக்கும் அஞ்சலி, அடுத்து என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமையா சொன்னதை கேட்ட போலீஸ் தமிழை விசாரிக்க அவள் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்லி புரிய வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | மோசடி வழக்கில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்... என்ன பிரச்னை?

அதாவது போலீஸ் அவளை புரிந்து கொண்டு ரிலீஸ் செய்ய மீண்டும் எழில் வீட்டிற்கு வருகிறாள், நான் எந்த தப்பும் பண்ணல என்று புரிய வைக்க முயற்சி செய்ய மனோகரி சுடர் மீண்டும் இந்த வீட்டிற்குள் வர கூடாது என திட்டம் போட்டு நீ என்ன சொன்னாலும் இனிமே நாங்க நம்ப போறது இல்ல என்று திட்டி அவளை பேக்கை தூக்கி போட்டு துரத்தி விடுகிறாள். 

இதனை தொடர்ந்து சுடர் ஒரு கோவிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க அங்கு வரும் வேலு தன்னுடன் அழைக்க சுடர் அவனிடம் இருந்து தப்பித்து இட்லி கடை பாட்டியின் கடையில் ஒளிந்து கொள்ள பாட்டியும் இங்கு யாரும் வரல என்று வேலுவை சமாளித்து அனுப்பி வைக்கிறார். 

அடுத்து சுடர் நடந்த விஷயங்கள் அனைத்தையும் பாட்டியிடம் சொல்லி கண் கலங்குகிறாள். மறுபக்கம் எழில் வீட்டில் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க அஞ்சலி மட்டும் சாப்பிடாமல் ரூமுக்குள் இருக்க மனோகரி அவளை தூக்கி வந்து சாப்பிட சொல்லி போர்ஸ் செய்கிறாள். அஞ்சலி தமிழ் வந்தா தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கிறாள். 

அடுத்து மனோகரி எழிலிடம் அந்த தமிழ் குழந்தைகளை எப்படி மாத்தி வச்சிருக்கா பாரு என்று கம்பளைண்ட் செய்ய எழில் ஒழுங்கா சாப்பிடு என்று அஞ்சலியை மிரட்டுகிறான். அஞ்சலி தமிழ் வராமல் சாப்பிட மாட்டேன் என்று உறுதியாக சொல்ல எழில் அவ வீட்டை விட்டு போய்ட்டா, இனிமே வர மாட்டா என்று சொல்ல நீங்க தானே அனுப்பனீங்க நீங்களே கூட்டிட்டு வாங்க என்று அடம் பிடிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மே10ம் தேதி வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு திரைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News