நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்

Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 1, 2024, 02:21 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்.
  • கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.
  • தேடி வந்த எழில்.
நினைத்தேன் வந்தாய்: கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேணுகா கழுத்தில் கத்தியை வைத்து சுப்ரமணி வேலு இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள அபி, கவின் ஆகியோர் சுடரை தேடி செல்ல முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது வேலு ரூமுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் சுடரிடம் உனக்கும் எனக்கும் கல்யாணம், ஒழுங்கா ரெடியாகிட்டு வா என்று சொல்ல சுடர் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவிக்கிறாள். மறுபக்கம் அபி, கவின் ஆகியோர் சுடரை தேடி அலைகின்றனர். 

மேலும் படிக்க | கில்லி படத்தின் ஹாலிவுட் வெர்ஷன்! விஜய்யாக நடிக்கும் ஆங்கில ஹீரோ யார்?

இன்னொரு பக்கம் எழிலும் சுடரை தேடி அலைந்து கொண்டிருக்கிறான், மனோகரி வேலுவுக்கு போன் செய்து அவளை தேடி குழந்தைகள் வந்தாலும் வருவாங்க என்று தகவல் கொடுத்து விடுகிறான். அதே போல் கவினும் அபியும் ஒரு வீட்டின் கதவை தட்ட வேலு வெளியே வருகிறான். 

சுடரின் போட்டோவை காட்டி இவங்களை பார்த்தீங்களா என்று விசாரிக்க வேலு ரவுடிகளை வைத்து குழந்தைகளை கடத்துகிறான், கல்யாணத்துக்கு நோ சொல்லி கொண்டிருக்கும் சுடர் கவினின் குரலை கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அபி அஞ்சலி நீ வந்தா தான் கண் முழிப்பா என்று ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல சுடர் அதிர்ச்சி அடைகிறாள். 

வேலு ஒழுங்கு மரியாதையா கல்யாணத்துக்கு ஒத்துக்க என்று மிரட்ட சுடர் முடியாது என்று சொல்ல அபி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட சுடர் வேறு வழியின்று கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறாள். சுடரை தேடி அலையும் எழில் கவின் வரைந்த டிராயிங் பேப்பரை பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மகாமுனி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்! வெளியானது ட்ரைலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News