போனை மிஸ் செய்த பரணி! ஷண்முகத்தை கொல்ல ஏற்பாடு... அடுத்து என்ன? அண்ணா சீரியல்...

Anna Serial Today's Episode Update: கனவில் வந்த அதே ரவுடிகள்.. ஷண்முகத்தை ரவுண்டு கட்டியதும் பரணி கொடுத்த ஷாக் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 14, 2024, 12:27 PM IST
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
  • ரவுடிகளின் வலையில் சண்முகம்
  • போனைத் தொலைத்த பரணி
போனை மிஸ் செய்த பரணி! ஷண்முகத்தை கொல்ல ஏற்பாடு... அடுத்து என்ன? அண்ணா சீரியல்... title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் திருவனந்தபுரம் பஸ் ஏறிய நிலையில் பரணி கனவில் கண்ட பஸ் தான் இது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஜீ தமிழ் தொலைக்காட்சி அண்ணா (Anna Serial) இன்றைய எபிசோடில் ஷண்முகம் ஏறிய பேருந்தை ஆட்டோவில் பின்தொடர்ந்த பரணி, அதே பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏனென்றால், ஷண்முகம் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அவனை சுற்றிவளைக்கும் ரவுடிகள் கத்தியால் குத்தி கொல்லுவது போல் பரணி கனவு கண்டிருந்தாள்.

அவசரத்தில் அவளது போனை ஆட்டோவில் மிஸ் செய்து விடுகிறாள், இதையடுத்து மறுபக்கம் சௌந்தரபாண்டி யாகம் நடத்தி கொண்டிருக்கும் ஒரு அய்யர் மூலமாக பாக்கியத்துக்கும் இசக்கிக்கும் இந்த யாகம் எதற்காக என்பது தெரிய வருகிறது.  

சீரியல்

சண்முகத்தை அழிக்க தான் இந்த யாகம் என்பதை புரிந்து கொண்டு பரணிக்கு போன் செய்கிறாள். ஆனால், போனை தொலைத்துவிட்டதால், பரணிக்கு இந்தத் தகவல் தெரியவில்லை.

இங்கே பஸ்ஸில் ஏறிய பரணியும் போலீசும் கேப் விட்டு உட்கார்ந்திருப்பதை பார்த்து சந்தேகமடைகிறாள், அடுத்த ஸ்டாப்பில் முத்துப்பாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் உள்ளே ஏற சண்முகத்தை அழைத்து வந்த லேடி போலீஸ் இவனை தான் போடணும் என்று கண்ணை காட்டி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள். இதை பார்த்து பரணிக்கு சந்தேகம் அதிகமாகிறது. 

மேலும் படிக்க | வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு பதில் நடிக்க வேண்டியவர்! அட, இந்த நடிகரா..

ரவுடிகள் முத்துபாண்டிக்கு போன் போட்டு பஸ்ல இப்போ நிறைய பேர் இருக்காங்க, எல்லாரும் அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுவாங்க, அப்புறம் இவனை போடுறோம் என்று போனை வைக்க முத்துப்பாண்டி சந்தோஷப்படுகிறான். ரவுடிகள் ஷண்முகத்திற்கு முன்னும் பின்னுமாக சுத்து போட்டு உட்காருகின்றனர். திடீரென ஒரு ரவுடி இடுப்பில் இருந்து கத்தி கீழே விழ அதை பார்த்து விடும் பரணி ஓடி வந்து ஷண்முகம் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள பரணியை பார்த்த ஷண்முகம் ஷாக் ஆகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: எழிலால் ஷாக்கான மனோகரி.. சுடர் கொடுத்த பதிலடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News