அக்ஷய திருதியை 2024.... செல்வம் பெருக... ராசிகளுக்கு ஏற்ற எளிய பரிகாரங்கள்

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் குபேரரையும் லட்சுமி தேவியையும் மகிழ்விக்க அக்ஷய திருதியை நாள் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த முறை அட்சய திருதியை மே 10 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அக்ஷய திருதியை திதி மே 10ஆம் தேதி அதிகாலை 4:17 மணிக்கு தொடங்கி மே 11ஆம் தேதி அதிகாலை 2:50 மணிக்கு நிறைவடைகிறது. 

அட்சய என்றால் குறைவில்லாமல் பெருகிக் கொண்டே செல்வது என்று பொருள். அதனால் தான் அட்சய திருதியை அன்று வாங்கும் பொருட்களும், செய்யும் செயல்களும் பெருகிக் கொண்டே இருக்கும் என கருதப்படுகிறது.

1 /14

அக்ஷய திருதியை 2024: உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டால் அல்லது கடினமாக உழைத்தும் உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியவில்லை என்றால், உங்கள் ராசிக்கு ஏற்ற சில பரிகாரங்களை, அக்ஷய திருதியை நாளில் செய்வதன் மூலம், லட்சுமி தேவி மற்றும் குபேரனின் அருள் உங்கள் மீது நிலைத்திருக்கும்.

2 /14

அட்சய திருதியை அன்று மேஷ ராசிக்காரர்கள் 1.25 கிலோ பருப்பை சிவப்பு துணியில் கட்டி  வியாபாரம் அல்லது தொழில் இடத்தில் வைக்க வேண்டும். அதே நேரத்தில், நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால், அந்த பருப்புகளை வழிபாட்டுத் தலத்தில் வைத்து, அட்சய திருதியை மறுநாள் காலையில் தானம் செய்யுங்கள். இதனால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

3 /14

அட்சய திருதியை அன்று ரிஷபம் ராசிக்காரர்கள் கலசத்தில் தண்ணீர் நிரப்பி தானம் செய்ய வேண்டும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபட விரும்பினால், ஒரு பாத்திரத்தில் கங்கை நீரை நிரப்பி அதன் வாயை வெள்ளை துணியால் கட்டவும். பூஜை அறையில் வைத்து தொடர்ந்து 7 நாட்களுக்கு இந்த தண்ணீரை வீட்டில் தெளிக்கவும்.

4 /14

மிதுன ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று நீர் மோர் தானம் செய்ய வேண்டும். இது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இது தவிர, பூஜை அறையில் ஒரு வெள்ளி நாணயத்தை பச்சை துணியில் சுற்றி வைப்பதால் வாழ்க்கையில் எப்போதும் மகிமையும் செழிப்பும் இருக்கும்.

5 /14

கடக ராசி சந்திரன் கிரகத்துடன் தொடர்புடையது. எனவே கடக ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் முத்து அணிய வேண்டும். ஒரு வெள்ளி நாணயம் இட்ட கலசத்தை கிழக்கு நோக்கி வைக்கவும். அடுத்த நாள், இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்கவும். இதனால் உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படாது.

6 /14

சிம்ம ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனை வழிபட வேண்டும். அதன் பிறகு வெல்லம் தானம் செய்யவும். இது உங்கள் அதிர்ஷ்டத்தை பலப்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் நீடித்து இருக்கும்.

7 /14

அட்சய திருதியை அன்று கன்னி ராசிக்காரர்கள் சாம்பிராணி தூபத்தை வீடு முழுவதும் காட்ட வேண்டும். இந்த நாளில் காய்கறிகள் மற்றும் நீர் மோர் தானம் செய்யுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளையும் நீக்கி, நிதி ஆதாயத்துடன், திருமண அம்சமும் வலுவடையும்.

8 /14

துலாம் ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்ய வேண்டும். அரிசி, முத்து போன்றவற்றை தானம் செய்யலாம். அதே சமயம் வீட்டின் வாஸ்துவில் கண்டிப்பாக வெள்ளை நிற பொருட்களுக்கு இடம் கொடுங்கள்.

9 /14

விருச்சிக ராசிக்காரர்கள் கண்ணாடி பாட்டிலில் தேனை நிரப்பி சிவப்பு துணியில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அட்சய திருதியையின் மறுநாள் இந்த தேனை ஏழைக்கு தானம் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது.

10 /14

அட்சய திருதியை அன்று, தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் துணியில் மஞ்சளைப் கட்டி, வழிபடும் இடத்தில் வைத்து வழிபட்டால், உங்கள் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இந்த நாளில் லட்டுக்களை மகாலட்சுமிக்கு நைவேத்தியம் செய்து விநியோகிக்கவும். இது உங்கள் நிதி சிக்கல்கள் அனைத்தையும் நீக்கும்.

11 /14

அட்சய திருதியை நாளில், மகர ராசிக்காரர்கள் லட்சுமி தேவியை மகிழ்விக்க எள்ளை ஒரு பாத்திரத்தில் வைத்து கருப்பு துணியில் போர்த்தி வைக்க வேண்டும். அதனை கிழக்கு திசையில் வைக்கவும். இது உங்கள் அதிர்ஷ்டத்தை பலப்படுத்தும்.

12 /14

கும்ப ராசிகள் அட்சய திருதியை நாளில் ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும். இது உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும். இது தவிர, அட்சய திருதியை அன்று இரும்பு, எள், தேங்காய் தானம் செய்யலாம்.

13 /14

அட்சய திருதியை அன்று, கடுகு மற்றும் வெள்ளி நாணயத்தை மஞ்சள் துணியில் கட்டி, வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கவும். இது உங்களுக்கு நிதி முன்னேற்றத்தை தரும். மேலும், உங்களுக்கு ஏதேனும் கடன் இருந்தால், அதிலிருந்தும் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

14 /14

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.