தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி சிக்கிய விவகாரம்…. பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை

CBCID Police Raid BJP MLA Nayanar Nagendran's Associate's House : தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 7, 2024, 06:23 PM IST
  • தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்
  • நயினார் நாகேந்திரனை நெருக்கும் சிபிசிஐடி
  • சென்னையில் பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி திடீர் சோதனை
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி சிக்கிய விவகாரம்…. பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை title=

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் ஆறாம் தேதி இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல பறக்கும்படை அதிகாரிகள் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தைக் கொண்டு சென்றதாக சதீஷ்,பெருமாள்,நவீன் ஆகிய மூவரை தாம்பரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் அவரது ஹோட்டலில் இருந்து தேர்தல் செலவு கொண்டு செல்லப்படுவதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இது சென்னையில் பல்வேறு நபர்களிடமிருந்து கைமாற்றி கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இதில் யார் யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து தாம்பரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு தாம்பரம் காவல்துறையினர் சம்மன் அனுப்பி விசாரணை செய்து வீடியோ பதிவு செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | சவுக்கு சங்கர் மீது சிறையில் தாக்குதலா? கைது முதல் தற்போது வரை..! அப்டேட் இதோ!

இந்த பணம் சென்னை கிரீன்வே சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கை மாறியது என கிடைத்த தகவலின் அடிப்படையில். அந்த ஓட்டலில் உரிமையாளரான பாஜக நிர்வாகி கோவர்தன் என்பவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். அவருக்கு உடல்நிலை சரிஇல்லாத காரணத்தால் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் கோவர்தனுக்கு சொந்தமான நீலாங்கரையில் வீட்டிற்கு சென்று சுமார் 6 மணி நேரம் விசாரணை செய்தனர். அவரது வீடு முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கிரீன்வேஸ் சாலையில் அவருக்கு சொந்தமான ஓட்டலிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தாம்பரம் காவல் துறையினர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் சோதனை நடத்தி ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்திருந்தனர். எனவே எங்கிருந்து இந்த ஓட்டலுக்கு பணம் கொண்டுவரப்பட்டது, இங்கிருந்து யாருக்கெல்லாம் கை மாறியது என்பது குறித்து தீவிரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவரங்கள் குறித்து கோவர்தன் மற்றும் அவரின் மகனிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்டமாக இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நெல்லை பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News